ஈபிள் கோபுரத்தை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக இரண்டு சிறார்கள் கைது!!

26 ஆவணி 2025 செவ்வாய் 20:39 | பார்வைகள் : 525
பிரான்ஸின் பரிஸ் நகரில் 2008 மற்றும் 2010-ல் பிறந்த இரு சிறுவர்கள், ஜிஹாதிய நோக்கமுள்ள தீவிரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறி 2025 ஆகஸ்ட் 1-ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், டெலிகிராம் செயலியில் ஒரே குழுவில் சேர்ந்திருந்தனர் மற்றும் ஈபிள் கோபுரம் மற்றும் யூத வழிபாட்டு தலங்களை குறிவைத்து, அவற்றைப் பற்றிய ஆன்லைன் தேடல்களை செய்துள்ளனர். இவர்களது திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே இருந்ததாகவும், அவர்கள் நேரடி ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குகள் குழந்தைகள் தொடர்பான தீவிரவாததைச் சார்ந்த நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை குறிக்கின்றன. தேசிய உள்நாட்டு எதிர்வாத அதிகாரிகள் தெரிவித்ததாவது, 2023-ல் 15 சிறுவர்கள், 2024-ல் 18 சிறுவர்கள், மற்றும் 2025 ஜூலை வரைக்கும் 11 சிறுவர்கள் இத்தகைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். இது, இளம் பிராயத்திலேயே கடுமையான வெறுப்புச்சிந்தனைகளுக்கு அவர்கள் எளிதாகக் கவரப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3