கடிதப் பெட்டியில் பெயர் இல்லாததால், இரு சகோதரர்கள் பக்கத்துவீட்டுகாரியை தாக்கினர்!!

25 ஆவணி 2025 திங்கள் 21:18 | பார்வைகள் : 859
செல் (Chelles) நகரத்தில், 38 மற்றும் 39 வயதுடையவர்கள் இரு சகோதரர்கள் அவர்களின் பக்கத்துவீட்டுகாரியை தாக்கிய வழக்கில் Meaux நீதிமன்றத்தில் 8 மாதம் தற்காலிக சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
இந்த பெண், அவர்களது மரணமடைந்த தந்தையின் மனைவியின் அக்கா மகள். சத்தம் மற்றும் குடும்ப முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சண்டையின் போது, மூத்த சகோதரர் பெண்ணை தள்ளியுள்ளார். இவர், கடிதப் பெட்டியில் பெயர் நீக்கப்பட்டதைப் பார்த்ததும் பதற்றத்தில் சண்டை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், பெண் 5 நாட்கள் ITT பெற்ற நிலையில், முகத்தில் காயங்கள் ஏற்பட்டு வீழ்ந்துள்ளார். தம்பி மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது சகோதரருக்கு உதவுவதற்காக வந்த போது, பெண்ணின் முகத்தில் ஒரு அடி கொடுத்துள்ளார். இருவரும் உண்மையாக மன்னிப்புக் கேட்டுள்ள அவர்னர், ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3