Paristamil Navigation Paristamil advert login

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்திய வடகொரியா

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்திய வடகொரியா

24 ஆவணி 2025 ஞாயிறு 07:38 | பார்வைகள் : 2718


வடகொரியா புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை சோதித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்பார்வையின் கீழ் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதித்துப் பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடகொரியா ஆயுதங்கள் உயர் போர் திறன்களைக் கொண்ட தனித்துவமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை ஆயுத அமைப்புகள் ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வான் இலக்குகளுக்கு விரைவாக பதிலளிக்கும் உயர் போர் திறன்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் செயற்பாடு மற்றும் எதிர்வினை முறை தனித்துவமான மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.