திருவிழாவில் வன்முறை!
22 ஆவணி 2025 வெள்ளி 12:58 | பார்வைகள் : 3637
ஓகஸ்ட் 20, புதன்கிழமை, Aurillac (Cantal) இல் நடைபெற்ற தெருத்திருவிழாவின் முதல் நாளில் கலவரம் வெடித்தது. 300க்கும் மேற்பட்ட நபர்கள் காவல்துறையினர்மீது கற்களை எறிந்தனர்.
நகரவிழாவின் முதல் நாள், சர்வதேச தெருத்திருவிழாவின் முனையில், ஓகஸ்ட் 20 புதன்கிழமை மாலை Aurillac (Cantal) மையத்தில் கலவரம் வெடித்தது, இதில் காவல்துறையினரும் கலவரக்காரர்களின் குழுவும் மோதினர். முதற்பட்டத் தகவல்களின்படி, ஒரு வங்கியின் முகப்பில் சுவரில் எழுத்துக்களை எழுதியவரைக் கைது செய்ததில் இருந்து பதட்டம் ஏற்பட்டது.

இரவு 11:30 மணியளவில் அனைத்தும் தொடங்கியது. முகமூடிகள் அணிந்திருந்த ஒரு குழு நகர மையத்தின் ஒரு பிராந்தியில் காவல்துறையினரை எதிர்க்கும் வகையில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்களைத் தாக்கியது, CRS காவலர்கள் மீது எறிபொருட்களை எறிந்தது, குப்பைக் கூடுகளில் தீ வைத்தது.
மொத்தம் 300க்கும் மேற்பட்ட நபர்கள் Aurillac தெருக்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். பலர் காவல்துறையினர் மீது தடுப்பணைகள் கட்ட வைக்கப்பட்ட தரைக் கற்களை அகற்றி எறிந்தனர்.
CRS காவலர்கள் கண்ணீர் புகைப் பிரயோகத்துடன் கலவரத்தை அடகக முயன்றனர்., இறுதியில் அதிக வன்முறையுடன் இருந்த குழுக்களை அருகிலுள்ள தெருக்களுக்கு திருப்பி அனுப்பினர். இதுவரை, எந்தவொரு கைது மற்றும்காயங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Aurillac நகரவிழா நிகழ்வு 3,000 கலைஞர்கள் மற்றும் 180,000 பார்வையாளர்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan