Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் இங்கிலாந்து

ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் இங்கிலாந்து

19 ஆவணி 2025 செவ்வாய் 08:18 | பார்வைகள் : 267


உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

 

கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

 

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தடுப்பது முக்கியம், உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம்.

 

அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுவரும் நிலையில், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வி முடிவும் எட்டப்படாத நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செல்கிறார்.

 

இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் ஜேர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி மூலம் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். இதன்போதே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்