போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகள் ட்ரோன் மூலம் - நான்கு சிறார்கள் கைது!
18 ஆவணி 2025 திங்கள் 13:24 | பார்வைகள் : 9340
Tarn பகுதியில், Albi சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் தொடர்பான புதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Albi சிறைச்சாலையில் நான்கு சிறுவர்கள் கைதிகளுக்கு கைப்பேசிகள் மற்றும் போதைப்பொருட்களை ட்ரோன் மூலம் வழங்கும் தருணத்தில் சிக்கியுள்ளனர்.
«Albi பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களின் அனுபவமும், நிலைமை பற்றிய அறிவும் காரணமாக, தப்பிச் செல்ல முயன்ற வாகனத்துடன் இருந்த நான்கு சிறுவர்களை நேரில் பிடிக்க முடிந்தது» என்று Albiயின் ஜோந்தார்மரி படைப்பிரிவின் தளபதி Claude Ducerf தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, «விசாரணை மற்றும் சோதனைகளின் போது ட்ரோன், போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் சிகரெட் பொட்டலங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன».
இந்த நடவடிக்கை, ஒரு பொதுமகனின் தகவலும், அங்கு இருந்த ராணுவத்தினரின் தொழில்முறை திறமையும் காரணமாக சாத்தியமானது. «அவர்களின் விரைவான செயல்பாடும், முன்முயற்சியும் காரணமாக மிகச் சிறந்த முடிவு எட்டப்பட்டது» என Claude Ducerf வலியுறுத்தினார்.
வாகன ஓட்டுநர் (அவரும் சிறுவனே) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் Toulouse வட்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் விரைவில் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார். மற்றவர்கள் ஏற்கனவே துறையின் குற்றப்பட்டியலில் அறியப்பட்டவர்களாக இருந்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan