Paristamil Navigation Paristamil advert login

20 நாட்களில் €4,000 சம்பாதித்த போலி ஆப்பிள் சாதன வியாபாரி கைது!!

20 நாட்களில் €4,000 சம்பாதித்த போலி ஆப்பிள் சாதன வியாபாரி கைது!!

17 ஆவணி 2025 ஞாயிறு 22:16 | பார்வைகள் : 526


23 வயதான நேபாளி ஒருவர், Claye-Souilly உள்ள வணிக வளாகத்தில் தனது காரில் இருந்து போலியான ஆப்பிள் சாதனங்களை டார்டி (Darty) பெட்டிகளில் வைத்து விற்பனை செய்துள்ளார். 

காவல் துறையினர் அவனைப் பார்வையிட்டபோது, அவன் போலி ஊனமுற்றவர் அட்டையும், போலி பில்லையும் பயன்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றதை கண்டனர். கைது செய்யப்பட்ட பிறகு, காவல் துறையினர் தியாய் (Thiais) பகுதியில் ஒரு கிடங்கில் சோதனை செய்து, 166 போலி வாசனை திரவியங்கள் பொருட்கள் மற்றும் 39 போலி தொழில்நுட்ப சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 20 நாட்களில் அவர் இந்த மோசடி மூலம் 4,000 யூரோக்கள் சம்பாதித்ததாகவும், Clignancourt மற்றும் Aubervilliers உள்ள சந்தைகளில் இருந்து பொருட்கள் வாங்கியதாகவும் கூறியுள்ளார். 

அவர் மீது ஐந்து மாதங்கள் தவணை சிறைத் தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகள் Seine-et-Marne பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலுமாக, அவர் கட்டாயமாக பிரான்சை விட்டு வெளியேற வேண்டும் என நிர்வாகம் (La préfecture) உத்தரவிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்