கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு தேடும் ஆதரவாளர்கள்

10 புரட்டாசி 2025 புதன் 19:15 | பார்வைகள் : 208
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொழும்பில் அவருக்கு ஒரு புதிய வீட்டைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சலுகைகளை பறிக்கும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, வீடு தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
அந்த வட்டாரத்தின்படி, ராஜபக்ஷ தனது பொது நிகழ்வுகளை எளிதாக்க போதுமான இடவசதி கொண்ட ஒரு வீட்டைத் தேடுகிறார்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு எதிர்கட்சிப்பக்கத்திலிருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனா இராமநாதனும் மட்டுமே வாக்களித்தனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025