மெக்சிகோவில் கோர விபத்து - 10 பேர் உயிரிழப்பு
9 புரட்டாசி 2025 செவ்வாய் 10:09 | பார்வைகள் : 3229
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கு பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மீட்பு படையினரால் விபத்துக்குள்ளானவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறை அதிகாரகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan