பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் மற்றுமொரு ஐரோப்பிய நாடு

3 புரட்டாசி 2025 புதன் 06:43 | பார்வைகள் : 263
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
செப்டம்பர் 22 ஆம் திகதி, பாலஸ்தீன அங்கீகாரம் குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தை பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்துகிறது.
இந்த கூட்டத்தின் போது, நிபந்தனைகளுடன் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், பெல்ஜியமும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான மாக்சிம் பிரீவோட் அறிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிய நிறுவனங்களுடன் பொதுகொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்தல், சாத்தியமான நீதித்துறை வழக்குகள், 2 இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு பெல்ஜியமில் persona non grata உள்ளிட்ட 12 உறுதியான தடைகள் இஸ்ரேல் மீது விதிகப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள கடைசி இஸ்ரேல் பணயக்கைதி விடுவிக்கப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்தை நிர்வகிப்பதில் ஹமாஸ் அமைப்பிற்கு எந்த பங்கும் இல்லை. பாலஸ்தீன அங்கீகாரம் நிர்வாக ரீதியில் முறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1