"மாதம் 1,300 யூரோவில் வாழட்டும்!" – மக்களின் கோபக்குரல் எழுகிறது!
2 புரட்டாசி 2025 செவ்வாய் 15:28 | பார்வைகள் : 4670
வடபிரான்சில் உள்ள Outinord தொழிற்சாலையில் 120 தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலையில் உள்ளனர். இவர்களில் பலரும், செப்டம்பர் 10 அன்று நடைபெறவுள்ள "France-ஐ முடக்குவோம்" என்ற போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
"நாங்கள்தான் கடனுக்கு காரணம் இல்லை. அவர்கள் மாதம் 1,300 யூரோவில் வாழட்டும்!" என்று வலியுறுத்துகின்றனர். மாணவர்களும் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் ஒருங்கிணைந்து, ஜனநாயகம் இயங்கவில்லை என்றும், அரசாங்கம் மக்களுக்காக செயல்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
மற்றொரு புறம், போராட்டத்தில் சேராதவர்களும் அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் உள்ளனர். Armentières நகரில், ஒரு நகராட்சி ஊழியர் மற்றும் அவரது மகனான போலீசாரும், பட்ஜெட் குறைப்பு மற்றும் விடுமுறை நாட்கள் நீக்கப்படுவது குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
“ஒரு நாள் விடுமுறையே கூட முக்கியமான ஓய்வு,” என அவர்கள் கூறுகிறார்கள். இது, நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும் அரசின் நடவடிக்கைகளில் உள்ள எதிர்ப்பையும் காட்டுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan