Paristamil Navigation Paristamil advert login

"யூதரை கொல்ல வந்தேன்" Neuilly-sur-Seineஇல் கத்தியுடன் மிரட்டிய நபர் கைது!!

"யூதரை கொல்ல வந்தேன்" Neuilly-sur-Seineஇல் கத்தியுடன் மிரட்டிய நபர் கைது!!

30 ஆவணி 2025 சனி 23:20 | பார்வைகள் : 2405


Neuilly-sur-Seine நகரில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு நபர் கத்தியுடன் யூதர்களை மிரட்டி தாக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அந்த நபர் சினகோகுக்கு அருகே இருந்த மூன்று நபர்களை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஒருவர் அருகிலுள்ள கடையில் ஒளிந்துள்ளார், அங்கு காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர் பின்னே நுழைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். 

ஆரம்ப விசாரணையில் அவர் “ஒரு யூதரை கொல்ல வந்தேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மத அடிப்படையிலான மிரட்டல் மற்றும் வன்முறை எனும் வழியில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நகர மேயர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் சுமார் நாற்பது வயதுடையவர் என்றும், யூத சமூகத்தினருக்கு எதிரான வார்த்தைகளை பேசினார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Hauts-de-Seine பகுதியில் யூதர்கள் செல்வதற்கான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 646 யூத விரோத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்