கிரெடி மியூச்சுவல் மற்றும் CIC வங்கிகளில் இரண்டு மணி நேர பண பரிவர்த்தனை தடை!!
30 ஆவணி 2025 சனி 21:53 | பார்வைகள் : 4328
கிரெடி மியூச்சுவல் மற்றும் CIC வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை (ஓகஸ்ட் 30) மாலை 5:20 மணி முதல் 7:30 மணி வரை பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் முடியாமல் சிக்கலில் சிக்கினர்.
இது ஒரு உள்கட்டமைப்பு சிக்கலால் ஏற்பட்டதாக வங்கி விளக்கம் அளித்துள்ளது. மென்பொருள் புதுப்பிப்புக்குப் பிறகு கணக்கில் இருப்பை சரிபார்க்க முடியாததால், வங்கி அட்டைகள் செயலிழந்துள்ளன. சுமார் 16 கிளைகளின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் மற்ற வங்கிச் சேவைகள் இயல்பாகவே செயல்பட்டுள்ளன.
Downdetector தளத்தின் தகவலின்படி, இந்த தடை குறித்து CIC வங்கிக்கு சுமார் 3,000 புகார்களும், கிரெடிட் மியூச்சுவலுக்கு 5,000க்கும் மேற்பட்ட புகார்களும் கிடைத்துள்ளன.
சமூக வலைதளங்களில், சிலர் உணவகத்தில் பணம் செலுத்த முடியாமல் தவித்ததாகவும், சிலர் சாலை கட்டண மையத்தில் வங்கி அட்டைகள் வேலை செய்யாததால் வாகனங்களை தடுத்ததாகவும் புகாரளித்துள்ளனர். வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan