Paristamil Navigation Paristamil advert login

இந்த தவறைச் செய்தால் - கொடுப்பனவுகள் இல்லை!!

இந்த தவறைச் செய்தால் - கொடுப்பனவுகள் இல்லை!!

29 ஆடி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2125


அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறுபவர்கள் புதிய நிபந்தனைகளுக்கு உள்ளாகின்றனர்.

எந்த வித உதவித்தொகை பெற்றுவருபவராக இருந்தாலும், அவர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை முதன்முதலாக Alpes-Maritimes மாவட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும்படி இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, விரைவில் இதே சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்