நாமல் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

28 ஆடி 2025 திங்கள் 12:24 | பார்வைகள் : 226
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.