அகதிகள் முகாமில் துப்பாக்கிச்சூடு! - ஒருவர் பலி!

28 ஆடி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 731
அகதிகள் முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அகதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜூலை 17, நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் பிரான்சின் வடக்கு பகுதியான Loon-Plage (Nord) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5 மணி அளவில் அங்குள்ள அகதிகள் முகாமில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும், 25 வயதுடைய அகதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இதே அகதி முகாமில், சென்றமாதம் ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டும், ஐவர் காயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.