ட்ரம்பிற்கு எதிராக ஸ்கொட்லாந்து முழுவதும் வீதிகளில் இறங்கிய போராட்டக்காரர்கள்
27 ஆடி 2025 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 2323
ஸ்கொட்லாந்தில் ட்ரம்பின் வருகையை கண்டித்து பலர் போராட்டத்தில் இறங்கினர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஸ்கொட்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆனால், அவரது வருகையைக் கண்டித்து சனிக்கிழமையன்று ஸ்கொட்லாந்து முழுவதும் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.
அதே சமயம் பிரித்தானிய தலைவர்கள் அமெரிக்கர்களுக்கு சாதமாக நடந்து கொள்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினர்.
ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கில் சுமார் 100 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் உள்ள தெருவில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்தனர்.
அவர்கள் ட்ரம்ப் இங்கு வரவேற்கப்படவில்லை என்றும், பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான அமெரிக்க வரிகளைத் தவிர்க்க, சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan