Paristamil Navigation Paristamil advert login

கரை ஒதுங்கிய அகதியின் சடலம்!!

கரை ஒதுங்கிய அகதியின் சடலம்!!

26 ஆடி 2025 சனி 19:41 | பார்வைகள் : 7684


 

ஆங்கிலக்கால்வாயூடாக பிரித்தானியா நோக்கிச் செல்ல முற்பட்ட அகதி ஒருவர் உயிரிழந்து, அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

Équihen (Pas-de-Calais) நகர கடற்கரையில் இன்று ஜூலை 26 சனிக்கிழமை காலை ஆண் ஒருவரது சடலம் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.  குறித்த நபர் படகில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் இதுவரை 17 அகதிகளின் சடலங்கள் இவ்வாறு பிரெஞ்சு கடற்கரைகளில் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை மீட்கப்பட்டிருந்தது 18 ஆவது சடலமாகும்.