ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை

26 ஆடி 2025 சனி 05:23 | பார்வைகள் : 597
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்தியது. இந்த சோதனை வெற்றி அடைந்தது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1