la Havreஇல் இருந்து பிரித்தானிய நோக்கி புறப்பட்ட படகு பிடிபட்டுள்ளது!!!
25 ஆடி 2025 வெள்ளி 15:05 | பார்வைகள் : 5026
லா ஹாவ்ரிலிருந்து (la Havre) புறப்பட்ட ஒரு படகு, அதில் இருந்த அல்பேனியர்கள் மற்றும் ஒரு வியட்நாமியருடன், பிரித்தானிய கரையை நெருங்கும் போது பிடிபட்டுள்ளது.
இந்த படகின் பணியாளர்கள் இருவரும் உக்ரைனியர்கள் ஆவார்கள். அவர்கள் மற்றும் பயணிகள் அனைத்தும் பிரித்தானிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த படகு மீது முன்பிருந்தே உளவுத்துறைக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சட்டவிரோத குடியேற்ற உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கு தற்போது லில்லில் உள்ள குற்றவியல் விசாரணை பிரிவிடம் மாற்றப்பட்டுள்ளது.
இது சர்வதேச அளவிலான கடத்தல் குழுவின் பகுதி என அதிகாரிகள் கருதுகின்றனர். விசாரணை தொடர்கிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan