Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்! - மக்ரோன் அறிவிப்பு!!

பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்! - மக்ரோன் அறிவிப்பு!!

25 ஆடி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1182


 

பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜூலை 24, வியாழக்கிழமை அறிவித்தார்.

கடந்த பல மாதங்களாக பல சந்தர்ப்பங்களில் மக்ரோன் இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், நேற்று இதனை மக்ரோன் மீண்டும் வலியுறுத்தினார். "மத்திய கிழக்கில் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டிற்கு உண்மையாக, பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்." என மக்ரோன் குறிப்பிட்டார்.

'வரும் செப்டம்பரில் ஐ.நா சபை மாநாட்டில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன்!' எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்