நோய்வாய்பட்ட விடுப்புகளில் சம்பளமில்லா நாட்களை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது!!
22 ஆடி 2025 செவ்வாய் 15:15 | பார்வைகள் : 5764
அரசு, வேலைக்கு செல்பவர்களின் நோய்வாய்பட்ட விடுப்புகளால் ஏற்படும் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில், தற்போதைய மூன்று நாள் சம்பளமில்லா நாட்களை ஆறு நாட்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதனால், Assurance Maladie (சுகாதாரக் காப்பீடு) வழங்கும் இழப்பீடு ஏழாவது நாளிலிருந்து மட்டுமே கிடைக்கும். தொழிலாளர்கள் இதை எதிர்த்தும், வாழ்வுக்கான செலவுகள் ஏற்கனவே உயர்ந்திருப்பதாகவும், இது அவர்கள் வாங்கும் சக்தியை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர்களும், தொழிற்சங்கங்களும் இந்த திட்டத்தை விமர்சிக்கின்றனர். நிறுவனங்களில் கூடுதல் நாட்கள் இழப்பீட்டைக் கையாள வேண்டுமா என்ற கவலை எழுந்துள்ளது.
CGT போன்ற தொழிற்சங்கங்கள், இது பாதுகாப்பற்ற, இடைக்கால வேலை செய்யும், மற்றும் சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை மிக அதிகமாக பாதிக்கும் என்று எச்சரிதுள்ளன. இன்று, தனியார் ஊழியர்களில் இரண்டு பகுதி மக்கள், நிறுவனத்தின் மூலம் இழப்பீட்டில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan