Paristamil Navigation Paristamil advert login

புயலில் சிக்கி ஒருவர் பலி!!

புயலில் சிக்கி ஒருவர் பலி!!

21 ஆடி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 1774


நேற்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்சின் கிழக்கு பகுதிகளை புயல் தாக்கியிருந்தது. புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Saône-et-Loire மாவட்டத்தில் உள்ள Saint-Cyr நகர்ப்பகுதில் ஐந்து மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிற்பகல் 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், புயல் தாக்கி அவர் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாவட்டத்துக்கு நேற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நண்பகல் 1 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள்ளாக அங்கு 260 மீட்புப்பணிகள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்