Paristamil Navigation Paristamil advert login

சவுதியின் தூங்கும் இளவரசர் மரணம்

சவுதியின் தூங்கும் இளவரசர் மரணம்

20 ஆடி 2025 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 389


லண்டனில் நடந்த ஒரு கார் விபத்தை அடுத்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் 36 வயதில் காலமானார்.

கடந்த 2005ல், அவருக்கு 15 வயதாக இருந்தபோது நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் இளவரசர் அல்-வலீத் பின் காலித் அல்-சவுத் மூளையில் பலத்த காயங்கள் மற்றும் உட்புற இரத்தப்போக்குக்கு ஆளானார்.

மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட அவர் மக்களால் தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்டார், ஆனால் ஒருபோதும் முழு சுயநினைவு திரும்பவில்லை. இளவரசர் அல்-வலீத், இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத்தின் மூத்த மகன் ஆவார், அவர் தமது எக்ஸ் பக்கத்தில் தனது மகனின் மரணத்தை அறிவித்தார்.

இளவரசர் அல்-வலீத் லண்டனில் உள்ள ஒரு இராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மிக மோசமான கார் விபத்தில் சிக்கினார். விபத்துக்குப் பிறகு, அவர் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் கோமா நிலையில் இருந்தார்.

இளவரசர் அல்-வலீத்தின் தந்தை தனது மகன் ஒரு நாள் முழுமையாக குணமடைவான் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. அவர் இளவரசரின் பராமரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டார், மேலும் உயிர்காக்கும் சாதனங்களைத் திரும்பப் பெறுவதையும் எதிர்த்தார்.

இளவரசர் அல்-வலீத் குணமடைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்