ஸ்பெயினில் பற்றியெரியும் காட்டுத்தீ…..
17 ஆவணி 2025 ஞாயிறு 19:04 | பார்வைகள் : 1285
ஸ்பெயினில் பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பத்தால் ஏற்பட்ட 14 பெரிய காட்டுத்தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
தீயை அணைக்க சாதகமற்ற சூழ்நிலைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை லண்டன் நகரின் பரப்பளவில் தீயால் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கோடைக்காலம் இதுவெனவும், தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக வீசும் வெப்ப அலை மற்றும் பலத்த தெற்கு பருவக்காற்று ஸ்பெயினில் நிலைமையை மோசமாக்குவதாக அவசர சேவைகளின் இயக்குநர் ஜெனரல் வர்ஜீனியா பார்கோன்ஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மேற்குப் பகுதியில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். கலீசியாவில், பல தீ சம்பவங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய காட்டுத் தீயாக உருவெடுத்தன, இதனால் அப்பகுதிக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் சேவைகள் மூடப்பட்டன.
கலீசியாவின் ஓரென்ஸ் மாகாணத்திலிருந்து அண்டை மாகாணமான ஜமோரா வரை தீ பரவியதால், மக்கள் வெளியேற்றப்பட்டனர், சிலர் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க மிக நெருக்கடியான சூழலில் அங்கேயே தங்கியுள்ளனர்.
இதனிடையே, ஸ்பெயினின் வடக்கு மற்றும் மேற்கில் கடுமையான தீ பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை நிறுவனமான AEMET எச்சரித்துள்ளது. வடக்கு கடற்கரையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று காரணமாக காட்டுத்தீயானது மணிக்கு 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவி வருகிறது. இதற்கிடையில், எக்ஸ்ட்ரீமதுரா பகுதியில் உள்ள படாஜோஸ் அருகே ஏற்பட்ட தீ, சில மணி நேரங்களுக்குள் 2,500 ஹெக்டேர்களை எரித்து, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வங்கி விடுமுறை வார இறுதியில், தீ விபத்து காரணமாக அரை டசினுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன, இதனால் பயணிகள் கோடை விடுமுறையின் உச்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை ஸ்பெயினில் 157,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பை காட்டுத்தீ எரித்துள்ளது, இது ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதற்கிடையில், அண்டை நாடான போர்ச்சுகலில், நாட்டின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் ஐந்து பெரிய தீயை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
லிஸ்பனுக்கு வடகிழக்கே சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள டிரான்கோசோவில் ஒரு தீ, தற்போது ஆறு நாட்களாகப் பற்றி எரிவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan