Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ! - ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

காட்டுத்தீ! - ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

16 ஆவணி 2025 சனி 20:33 | பார்வைகள் : 1073


காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, நாளை ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை ஆறு மாவட்டங்களுக்கு 'சிவப்பு' நிற உட்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Aude, Bouches-du-Rhône, Gard, Hérault, Pyrénées-Orientales மற்றும் Vaucluse ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார காலமாக மேற்கு பிராந்தியங்களில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக பெரும் காட்டுத்தீ பரவு அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, Rhône, Drôme, Ardèche, Var, Haute-Garonne, Tarn, Aveyron, Lot, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Dordogne, Haute-Vienne, Charente மற்றும் Deux-Sèvres ஆகிய 14 மாவட்டங்களுக்கு இதே எச்சரிக்கை காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Bouches-du-Rhône மற்றும் Var ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள காடுகளுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்