இன்று சீட்டிழுப்பு! - காத்திருக்கிறது €234 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம்!!

15 ஆவணி 2025 வெள்ளி 17:04 | பார்வைகள் : 823
கடந்த ஜூன் 17 ஆம் திகதியின் பின்னர் இதுவரை யூரோமில்லியன் சீட்டிழுப்பில் எவரும் வெற்றிபெறவில்லை. €17 மில்லியன்களில் ஆரம்பமான சீட்டிழுப்பு இந்த இரண்டுமாத காலத்தில் €234 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இன்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மொத்தமாக €234 மில்லியன் யூரோக்களுடன் சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது. ஐந்து ரகசிய இலக்கங்களையும், இரண்டு நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் இந்த தொகை வெல்ல முடியும்.
இன்று இந்த தொலை வெல்லப்படாவிட்டால் அடுத்தவாரம் €250 மில்லியன் யூரோக்களாக அதிஷ்ட்டத்தொகை அதிகரிக்கும்.