Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோ தெருக்களில் ரோபோ நாய்

மெக்சிகோ தெருக்களில் ரோபோ நாய்

13 ஆவணி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 792


மெக்சிகோவில் வால்டாக் என்ற பெயருடைய ரோபோ நாய், தெருக்களில் விலங்குகளிடம் கருணை காட்டுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ரோபோ ஆகும். 

இது மெக்சிகோவின் மான்டரே (Monterrey) நகரில் வலம் வந்து விலங்குகள் மீதான கொடுமைகளை தடுப்பது மற்றும் அவற்றுக்கு நல்வாழ்வை உறுதி செய்வது பற்றி பேசுகிறது.

ஒரு மென்மையான, உலோகக் குரலில் பேசும் இந்த ரோபோ, பீகிள் (beagle) நாயின் அளவுடையது. 

இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் விலங்கு உரிமைகள் குறித்து உரையாடுகிறது.

வணக்கம், நான் வால்டாக். தெருக்களில் வாழும் விலங்குகளுக்கு குரல் கொடுக்க நான் இங்கு வந்திருக்கிறேன் என அது கூறியது.

மெக்சிகோ செனட்டர் வால்டோ பெர்னாண்டஸ் (Waldo Fernandez) என்பவர் இந்த ரோபோவை தன் சொந்த பணத்தில் $4,084 கொடுத்து வாங்கி, அதற்கு தன் பெயரைச் சூட்டியுள்ளார்.

விலங்கு ஆர்வலரான பெர்னாண்டஸ், இந்த வால்டாக் ரோபோ விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் கருணை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வால்டாக் பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சென்று மக்களுக்கு விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்