காசாவில் பட்டினியால் அதிகரிக்கும் இறப்புகள் - இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் அழுத்தம்

13 ஆவணி 2025 புதன் 07:22 | பார்வைகள் : 677
காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
513 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம்103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.