பிரான்ஸ் - இங்கிலாந்து கடல் எல்லையை கடக்க முயன்ற சோமாலி பெண் உயிரிழப்பு!

13 ஆவணி 2025 புதன் 01:31 | பார்வைகள் : 1583
திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை, பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள தன்கேர்க் (Dunkerque) அருகே, சுமார் 25–30 வயதுடைய சோமாலி வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கடல் வழியாக இங்கிலாந்தை சட்டவிரோதமாக அடைய முயன்றதாக கடல்சார் மாவட்டஆணையம் தெரிவித்துள்ளது.
மாலோ கடற்கரையில் (Malo) இருந்து ஒரு சிறிய படகில் (taxi-boat) ஏறிச் செல்ல முயன்றபோது, அவர் கடலில் சிக்கியதாக, குடிபெயர்ந்தோர் உதவி அமைப்பான Utopia 56 X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய '“semi-rigide” ' வகை படகுகள் சில மீட்டர் மட்டுமே நீளமுடையவை. இவை கடல் வழியாக வந்து, குடிபெயர்ந்தவர்களை ஏற்றி, அபாயகரமான பயணங்களைத் தொடங்கச் செய்கின்றன.
மருத்துவர்கள் மூன்று முறை உயிர் காக்கும் முயற்சிகள் செய்தும், அவரை மீட்டெடுக்க முடியவில்லை.
அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, இது 2025 ஆம் ஆண்டில் கடல் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சித்துக் கடலில் உயிரிழந்த 19வது சம்பவம் ஆகும்.
திங்கட்கிழமை மட்டும், பிரான்ஸ் கடல்படை மற்றும் மீட்பு படையினர், Manche மற்றும் வடக்குக் கடலில் (mer du Nord) நடைபெற்ற பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் மொத்தம் 164 குடிபெயர்ந்தவர்களை மீட்டுள்ளனர். இவை Hardelot, Touquet Merlimont-Plage (Pas-de-Calais) கடற்கரைப் பகுதிகளில் நடந்ததாக கடல்படை மாவட்டஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸ்–இங்கிலாந்து குடியேற்ற ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும், நல்ல வானிலை காரணமாக, பல குடிபெயர்ந்தோர் இன்னும் கடல் கடப்பதைத் தொடர்கிறார்கள்.