ஜப்பானின் மக்கள்தொகை நெருக்கடி - எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை...
11 ஆவணி 2025 திங்கள் 12:42 | பார்வைகள் : 2123
ஜப்பானின் மக்கள்தொகை நெருக்கடி குறித்து அறிக்கை ஒன்றில் டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.
ஜப்பான் நாடு இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை இழக்கும் ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள எலோன் மஸ்க், இந்தப் போக்கை மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவு (AI) மட்டுமே சாத்தியமான தீர்வாக இருக்க முடியும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
சமீப காலமாக ஜப்பான் அதன் மிகக் கடுமையான மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, அரசாங்க தரவுகளில் கடந்த ஆண்டில் பிறப்புகளை விட சுமார் 900,000 இறப்புகள் பதிவாகியுள்ளது.
ஆனால் இந்த மக்கள்தொகை வீழ்ச்சி என்பது அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்றும் தொழில்நுட்பத்தால் ஏற்படவில்லை என்றும் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பான் அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்கள்தொகை வீழ்ச்சியை எதிர்கொள்கிறது. அரசாங்க தரவுகளில் கடந்த ஆண்டில் பிறப்புகளை விட அதிக இறப்புகளே பதிவாகியுள்ளன.
மட்டுமின்றி, கருவுறுதல் விகிதங்களில் நீண்டகாலமாக நீடிக்கும் வீழ்ச்சி மற்றும் வயதான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக விரிவடையும் இடைவெளி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளுக்கு கடுமையான சவால்களை உருவாக்குகிறது.
சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கியமான துறைகளை ஆதரிப்பதன் மூலமும், சுருங்கி வரும் பணியாளர்களின் பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், வயதான சமூகத்தின் மீதான சுமையைக் குறைக்க AI உதவும் என்று மஸ்க் வாதிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan