Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் இரவு பணி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா ?

பெண்கள் இரவு பணி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா ?

10 ஆவணி 2025 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 208


பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இரவுப் பணி புரிவது அதிகரித்து வரும் நிலையில், இது அவர்களுக்கு சாதகமானதல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு பணியை தொடர்ச்சியாகச் செய்வதால் உடலில் பல மாற்றங்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
 

நம் உடலின் தூக்க-விழிப்புச் சுழற்சி சூரிய ஒளியைச் சார்ந்துள்ளது. பகலில் கார்டிசோல் அதிகரித்து விழிப்புணர்வையும், இரவில் மெலடோனின் தூக்கத்தையும் தூண்டும். பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடும்போது, இந்தச் சுழற்சி சீர்குலைந்து, கார்டிசோல் அதிகரித்து மெலடோனின் உற்பத்தி குறைகிறது.

ஆய்வுகளின்படி, இரவு வேலை செய்யும் பெண்களுக்குக் கார்டிசோல் அளவு அதிகமாகவும், மெலடோனின் குறைவாகவும் இருக்கும். இது மன அழுத்தம், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு, இரவுப் பணிபுரியும் பெண்களுக்கு ஆஸ்துமா வாய்ப்பு அதிகம் எனக் கண்டறிந்துள்ளது.

இரவுப் பணி இயற்கையான தூக்கச் சுழற்சியைக் கடுமையாகப் பாதித்து, ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். உடல் உயிரியல் கடிகாரத்தின்படி இரவு-பகல் சுழற்சிக்கு ஏற்ப இயங்குவதால், இந்தச் சீர்குலைவு பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்