Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரித்தானியாவில் பூனைகளை கொடூரமாக கொலை செய்து ரசித்த சிறுவன்

பிரித்தானியாவில் பூனைகளை கொடூரமாக கொலை செய்து ரசித்த சிறுவன்

5 ஆவணி 2025 செவ்வாய் 19:38 | பார்வைகள் : 1513


பிரித்தானியாவில் திறந்தவெளியில் இரண்டு பூனைகளை கொடூரமாக கொலை செய்து அதனை ரசித்த 17 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,

அந்த சிறுவன் மனிதர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக பூனைகளை கொலை செய்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், மனிதர்களை கொலை செய்ய முடியாமல் போனதால் விலங்குகளை கொலை செய்து தனது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார் என அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்