Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு

கனடாவில் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு

2 ஆடி 2025 புதன் 19:15 | பார்வைகள் : 103


கனடாவின் சாஸ்காட்சுவானின் தெற்குப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, மேபல் கிரிக் Maple Creek. பொக்ஸ்வெலி Fox Valley மற்றும் என்டர்பிரைஸ் Enterprise ஆகிய கிராமப்புற மாநகராட்சிகள், ஏற்கனவே அவசரநிலை அறிவித்துள்ள பிக் ஸ்டிக் Big Stick மாநகராட்சியிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறோம். இளங்காலம் முதல் இப்போது வரை சராசரியாக ஒரு இன்ச் மழை கூட கிடைக்கவில்லை என பிக் ஸ்டிக் Big Stick மாநகராட்சியின் தலைவர் க்விண்டன் ஜாக்ஸ்ட்ரைட் தெரிவித்துள்ளார்.

தீ அபாயம் மிக அதிகம், மக்கள் தங்கள் மாட்டுக்கு கூடுதலான தீவனத்தை சேமிக்கப் போராடுகிறார்கள். ஆனால் பல இடங்களில் புல்வெளிகள் வறண்டு கொண்டிருக்கின்றன,” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்