Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : பிரதமர் விடுக்கும் அவசர எச்சரிக்கை!!

வெப்பம் : பிரதமர் விடுக்கும் அவசர எச்சரிக்கை!!

30 ஆனி 2025 திங்கள் 15:09 | பார்வைகள் : 1010


 

நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பிரெஞ்சு மக்களுக்கு பிரதமர் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்பம் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் மறுநாள் புதன்கிழமையும் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 41°C வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுறது.

இந்நிலையில், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அடுத்துவரும் மூன்று நாட்கள் அதிக வெப்பம் நிலவும் எனவும், வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், தண்ணீர் அருந்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்