சட்டப்பூர்வ வயது வரம்பில்லாமல் ஓய்வூதிய சீர்திருத்த முறையை முன்மொழிந்த கேப்ரியல் அட்டால்!!
29 ஆனி 2025 ஞாயிறு 21:56 | பார்வைகள் : 4207
முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால், வயது வரம்பின்றி புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தை முன்வைத்துள்ளார்.
இவர் 2027க்கு முன்னர் ஒரு ஜனநாயக வாக்கெடுப்பின் மூலம், "உலகளாவிய, சுதந்திரமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட" ஓய்வூதிய திருத்தத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இச்சீர்திருத்தம், தற்போதைய 64 வயது ஓய்வு வரம்பை தவிர்த்து, பங்களிப்பு ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
இவர் அரசாங்கத்தின் பிற நிதி ஒதுக்கப்பட்ட சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் ஆதரிப்பதாகவும் தனது திட்டத்தில், "€40 பில்லியன் ஊதிய உயர்வு என்ற அதிர்ச்சி!" திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார்,
மேலும், வளர்ந்து வரும் நிதிச்சுமையை சமநிலைப்படுத்த, சில ஓய்வூதியங்களை பணவீக்கத்துடன் இணைக்காமல் வைப்பது பற்றி அவர் கூறியுள்ளார். "அனைத்து ஓய்வூதியங்களும் தானாகவும் முழுமையாகவும் பணவீக்கத்துடன் இணைக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை" எனவும் 2024-இல் இதற்கான செலவு மட்டும் €15 பில்லியன் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு வரவுச் செலவுத் திட்டத்தில், பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் சில செலவுகளை உறைந்த நிலையில் வைத்திருக்கும் ஒரு "சிறப்பு வருடம்" (année blanche) குறித்து எதிர்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan