Paristamil Navigation Paristamil advert login

வானவேடிக்கையை பார்வையிடும் போது பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை!!

வானவேடிக்கையை பார்வையிடும் போது பால்கனியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை!!

29 ஆனி 2025 ஞாயிறு 14:02 | பார்வைகள் : 563


செர்ஜி (Cergy) நகரில் வானவேடிக்கைக் காட்சியை பார்வையிடும் போது, 4 வயது சிறுவன் ஒருவர் இரண்டாவது மாடியில் உள்ள குடியிருப்பின் பால்கனியில் நாற்காலியில் அமர்ந்திருந்த 4 வயது சிறுவன்  கீழே விழுந்துள்ளார்.

அவர் முதலில் கான்கிரீட் ஓரத்தில் அடிபட்டு பின்னர் 3–4 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 11:14 மணியளவில் நடந்துள்ளது. மருத்துவ குழுவினரின் உதவியுடன் குழந்தையை பரிஸின் Necker மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நேரத்தில், செர்ஜி நகரம் l’Axe majeur பகுதியில் ஒரு பெரிய விழாவையும் வானவேடிக்கையையும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஒளி மற்றும் ட்ரோன் காட்சி நகரின் மேல் வானத்தை ஒளிரச் செய்தது, பலர் நேரில் வந்து ரசித்தனர்; சிலர் வீடுகளில் இருந்தே பார்த்துள்ளனர். ஆனால் ஒரு குடும்பத்திற்கு இந்த மகிழ்ச்சி நிறைந்த இரவு சோகமாக மாறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்