Paristamil Navigation Paristamil advert login

Istres இல் சிற்றுந்திற்குள் மறந்துபோன சிறுவன் மரணம் – நெஞ்சை பதைக்கவைக்கும் விபரங்கள்

Istres இல் சிற்றுந்திற்குள் மறந்துபோன சிறுவன் மரணம் – நெஞ்சை பதைக்கவைக்கும் விபரங்கள்

29 ஆனி 2025 ஞாயிறு 12:45 | பார்வைகள் : 617


மிகுந்த வெயிலில், தந்தையால் சிற்றுந்திற்குள் மறந்துவிடப்பட்ட இரண்டு வயது சிறுவன், இஸ்தர் (Istres) இல் உள்ள விமானப்படை தளத்தில் இறந்த நிலையில் 26 ஜூன் கண்டெடுக்கப்பட்டார்.

என்ன நடந்தது?


தந்தை, தனது மகனை குழந்தை பராமரிப்பு மையத்திற்கு (crèche) விடுவதாக திட்டமிட்டு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார்.

அவரது வேலை இடமான இஸ்த்ர் விமானப்படைத் தளத்தில் சிற்றுந்தை நிறுத்தி விட்டு, குழந்தையை இறக்காமல், தன்னுடைய வேலைக்கு நேரடியாக சென்றுவிட்டார்.

மாலை 4 மணிபோல் , அவரது மனைவி குழந்தை குழந்தைகள் காப்பகத்தழற்கு வரவில்லை என்று அழைத்தபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்தது.

அவர் சிற்றுந்தை நோக்கி ஓடி சென்றார், அங்கு மூச்சற்ற நிலையில் இருந்த குழந்தையை பார்த்து, உடனடியாக வைத்தியசாலைக்குக் குழந்தையை கொண்டு சென்று, சிசிச்சை முயற்சிகள் செய்தும் பயனில்வாமல் போய்விட்டது. குழந்தை இறந்துவிட்டது

 

36°C வரை வெப்பம் அந்த நாளில் இஸ்திரில் பதிவானது.

சிற்றுந்து நேரடியாக வெயிலில் இருந்ததால், அதற்குள் வெப்பநிலை 60°C வரை உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீரிழப்பு (déshydratation) தான் மரணத்துக்குக் காரணம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குழந்தையின் தந்தை, Dassault Aviation நிறுவன ஊழியராக இருக்கிறார். அறியாமை காரணமாக மனித உயிரிழப்புக்கான வழக்கு (homicide involontaire) இவர் மீது தொடரப்பட்டுள்ளது.

அவர் தற்காலிக காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

விசாரணையை வான்படையுடன் கூடிய ஜோந்தாமரி நடத்தி வருகிறது.


இது போன்ற சோகமான சம்பவங்கள் கடந்த ஆண்டு (2024) Alsace மற்றும் Carpentras நகரங்களில் ஏற்பட்டிருந்தன.

வாடகைக் சிற்றுந்தில் அல்லது வீடுகளின் முன் வெயிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மறந்து போனதால் மரணம் நிகழ்ந்துள்ளது.

ஒரு குழந்தையை ஒரு நிமிடத்துக்கும் வாகனத்தில் தனியாக வைக்க கூடாது. வெப்பம் ஒரு சிறிய இடத்தில் மிக வேகமாக உயரும்.

ஒரு 'சாதாரண மறதி', வாழ்க்கை முழுக்க நினைவு வைக்கும் சோகமாக மாறிவிடும்.

இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க தந்தையர், தாய்மார்கள், குடும்பத்தினர், குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்