Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரான்சிற்கு வெளியே தங்கியிருப்பின் போது மருத்துவ விடுப்புக்கான நலத்தொகை இல்லை – நீதிமன்றம் உறுதி!

பிரான்சிற்கு வெளியே தங்கியிருப்பின் போது மருத்துவ விடுப்புக்கான நலத்தொகை இல்லை – நீதிமன்றம் உறுதி!

29 ஆனி 2025 ஞாயிறு 11:45 | பார்வைகள் : 2319


பிரான்ஸைத் தற்காலிகமாக விட்டு வெளியூர் சென்றிருக்கும் ஒரு பணியாளருக்கு, அவர் மருத்துவ விடுப்பில் இருப்பினும், Assurance Maladie மூலம் வழங்கப்படும் நலத்தொகைகள் (indemnités journalières) வழங்க அவசியமில்லை என வழக்கு விசாரணை நீதிமன்றம் (Cour de cassation) முடிவு செய்துள்ளது.

தீர்ப்பின் முக்கியக் கருத்துகள்

மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒருவரிடம் சமூக பாதுகாப்பு அமைப்பு (Sécurité sociale) பின்வருமாறு சோதனை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது:

மருத்துவர் வழங்கிய வழிமுறைகளை பின்பற்றுகிறாரா?

மருத்துவ சோதனை சேவையின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் கட்டாய சோதனைகளுக்கு உட்படுகிறாரா?
அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் வீட்டைவிட்டு வெளியே செல்கிறாரா?

என்பவை!

ஆனால் பிரான்சிற்கு வெளியே தங்கும்போது, இந்த சோதனைகள் முடியாத நிலையை உருவாக்கின்றன என்று நீதிமன்றம் விளக்கியது.


'வெளிநாட்டு தங்குமிடம், கண்காணிப்பை முற்றிலும் இயலாததாக்குகிறது' –Cour de cassation

விவகாரம் எங்கே தொடங்கியது?

ஒரு பெண்மை ஊழியர், தனது மருத்துவ விடுப்பின் போது துனிசியாவில் தங்கியிருந்தார்.
இதை அறிந்த ஊPயுஆ அவர் பெற்ற நலத்தொகைகளை திருப்பித் தரச் சொன்னது.
அந்த ஊழியர் நீதிமன்றத்தை நாடினார், முதலில் வெற்றியும் பெற்றார்.

ஆனால் Cour de cassation இறுதியாக, அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்து, CPAM-ஐ நீதிமுறையில் ஆதரித்தது.

இந்தத் தீர்ப்பு ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகள் பொருந்தும் சில நேரங்களில் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

பொதுவாக, பிரான்ஸில் இல்லாதவர்கள், அவர்கள் மருத்துவ விடுப்பில் இருப்பினும், தற்போதைய சட்டப்படி நலத்தொகைகள் பெற முடியாது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்