வெப்ப அலையால் பாடசாலைகள் மூடப்படுகின்றன!

29 ஆனி 2025 ஞாயிறு 09:44 | பார்வைகள் : 902
ஜூன் 29, ஞாயிறு, பிரான்ஸ் முழுவதும் வெப்ப அலை எச்சரிக்கை (எபைடையnஉந ழசயபெந உயniஉரடந) வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 40°ஊ-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ,தனால் பல நகரங்கள் பாடசாலைகளை மூட முடிவு அரசு முடிவு செய்துள்ளது.
தூர் நகரம் (Tours):
ஜூன் 30 (திங்கள்) மற்றும் ஜூலை 1 (செவ்வாய்) ஆகிய தினங்களில் பாடசாலைகள் மாலை நேரத்தில் மூடப்படும்.
காலை வகுப்புகள் நடைபெறும்,
ஆனால்:
'மாணவர்கள் 11:30 மணிக்கு அல்லது 13:30 மணிக்குப் பின்னர் (உணவுக்குப்பின்) தவறாமல் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.'
அது மாநகரமும், தேசிய கல்வித்துறையும் ,ணைந்து எடுத்துள்ள ஒரு 'விலக்கான' நடவடிக்கை ஆகும்.
பிற நகரங்களிலும் வெப்பத்தால் நடவடிக்கைகள்
La-Charité-sur-Loire (Nièvre):
செவ்வாயன்று (ஜூலை 1) பிற்பகலில் ப மூடசாலை மூடப்படும்.
குளிர்ந்த அடித்தள அறைகளில் குழந்தைகளுக்கான தற்காலிக ,டம் ஏற்பாடு செய்யப்படும்.
Vaucluse:
Le Thor, Cavaillon – மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்படும்.
வெப்பநிலை 40°ஊஐ கடந்துவிடும் என எச்சரிக்கை.
Melun (Seine-et-Marne):
ஜூலை 1 மற்றும் 2 – அனைத்து பாடசாலைகளும் மற்றும் நகராட்சி ஓய்வுநேர மையங்களும் மூடப்படும். மாணவர்கள் வரமுடியாது; பெற்றோர்கள் முன்னேற்பாடு செய்ய வேண்டும்.
தாங்க முடியாத வெப்பத்தில் வகுப்புகளை நடத்துவதை நிறுத்த வேண்டும்.' - FCPE
"கல்வித்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் குழுவினருக்கு வெளிப்படையான வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
'பாடசாலைஎன்பது எந்த நிலையிலும் மாணவர்களை பாதுகாப்புடன் வரவேற்க வேண்டிய ,டம் ஆகும்,' என FCPE வலியுறுத்தி உள்ளது.