பிரான்சில் விமான விபத்து - விசாரணைகள் ஆரம்பம்
27 ஆனி 2025 வெள்ளி 20:48 | பார்வைகள் : 8163
இன்று வெள்ளிக்கிழமை, பிரான்ஸின் EURE-ET-LOIR பகுதியில் உள்ள சார்த் (Chartres) அருகே Champhol என்ற இடத்தில் ஒரு சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர், ஒரு 77 வயதான பழைய இராணுவ ஜெனரல் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தம்பதியினர், சாவடைந்துள்ளளனர்.
விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அது திடீரென வீழ்ந்து, ஒரு வீட்டு தோட்டச் சுவரையும், நிறுத்தப்பட்டடிருந்த வாகனத்தையும் மோதி வீதியில் வீழ்ந்தது. வீடுகளிற்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை.

இவ்விபத்தில் வேண்டுமென்றே செய்யத கொலை (homicide involontaire) குற்றச்சாட்டில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் விமானபோக்குவரத்தின் பொது ஆணையமான DGAC யினாலும் நடாத்தப்படுகிறது.
விமான விபத்து விசாரணை அமைப்பு (BEA) மாலை நேரத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது.. விபத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு காரணமும் விட்டுவைக்கப்படவில்லை.
மேலும், மூவரின் உடல்களுக்கும் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan