Paristamil Navigation Paristamil advert login

மகிழுந்துக்குள் வைத்து பூட்டப்பட்ட குழந்தை - மூச்சுத்திணறி பலி!

மகிழுந்துக்குள் வைத்து பூட்டப்பட்ட குழந்தை - மூச்சுத்திணறி பலி!

27 ஆனி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 662


 

மகிழுந்துக்குள் வைத்து பூட்டப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bouches-de-Rhône மாவட்டத்தில் உள்ள விமானத்தளம் ஒன்றின் அருகே உள்ள தரிப்பிடத்தில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மாலை 4 மணி அளவில் குழந்தை மகிழுந்துக்குள் இருப்பதை கண்டறிந்த சிலர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்துவந்த தீயணைப்பு படையினர் மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து, குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

36°C வெப்பம் வெளியே நிலவியதாகவும், குழந்தை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்