Paristamil Navigation Paristamil advert login

வெறும் கற்பனைத் தீர்மானங்கள் - சர்ச்சை தொடர்கின்றது ! - மூவர் உயிரிழப்பு - ஒருவர் உயிராபத்தில் – போதைப்பொருள் உபயோகம்!

வெறும் கற்பனைத் தீர்மானங்கள் - சர்ச்சை தொடர்கின்றது ! -  மூவர் உயிரிழப்பு - ஒருவர் உயிராபத்தில் – போதைப்பொருள் உபயோகம்!

27 ஆனி 2025 வெள்ளி 04:00 | பார்வைகள் : 6974


வியாழக்கிழமை வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்த எந்தத் தீர்மானமும் எடுக்காத முடிவுகளையே பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரான்சின் பிரதமர் பிரான்சுவா பய்ரூ, பெண்களின் வேலை மற்றும் கடின உழைப்பின் மீதான முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தினார். இருப்பினும், கடின உழைப்புக்கான (pénibilité)  கணக்கீடுகள் அடிப்படையில் முன்கூட்டியே ஓய்வு பெறும் உரிமை குறித்த மோதல் மற்றும் விவாதம் தொடர்கிறது. இதை தீர்க்க, பிரதமர் அலுவகத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் இடையிலான பேச்சுவார்த்தை எந்தத் தீர்வையும் ஏற்படுத்தவில்லை.

ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பய்ரூ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் நிறுவினார்.

'நான் நடந்த முன்னேற்றங்களில் ஆச்சரியமடைந்துள்ளேன். ஊழியர்களும் முதலாளிகளும் ஒருவர் மற்றவரின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டுள்ளனர். மேலும், அனைவரும் பொதுநலத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளனர்' எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கூறியது போல, அனைத்து பங்கேற்பாளர்களும் 2030க்குள் ஓய்வூதியத் திட்டத்தின் நிதி சமநிலையை ஏற்படுத்த வேண்டிய தேவையை ஒப்புக்கொண்டுள்ளனர். 2023 சட்டத்தின்படி ஓய்வுபெறும் வயது 62ல் இருந்து 64ஆக உயர்த்தப்பட்டது என்பதையும் அவர்கள் ஏற்றனர்.

பெண்கள் மற்றும் பெற்றோர் குறித்த 'குறைந்த ஓய்வுப்பரிசீலனை வயதுக்கான' விதிகள் இலகுவாக்கப்பட்டுள்ளன.

அனைத்து காலாண்டுகளும் (trimestres) நிறைவடையாவிட்டாலும், முழு ஓய்வுப் பத்திரம் பெறும் வயது 67ல் இருந்து 66 ஆக குறைக்கப்படும்.

ஒரு பிள்ளை பெற்ற பெண்களின் ஓய்வூதியம் கடந்த 25 ஆண்டுகளுக்கு பதிலாக 24 சிறந்த ஆண்டுகள் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இரண்டு பிள்ளைகள் பெற்ற பெண்களுக்கு 23 சிறந்த ஆண்டுகள் அடிப்படையாக அமையும்.

போன்ற குறிப்புகளை வழங்கினார் பிரதமர்.

பிரதமர் பார்வையில், பெரும்பாலான விஷயங்களில் ஒப்பந்தம் சாத்தியமாக இருக்கிறதெனத் தெரிகிறது. ஆனால் இரண்டு முக்கியமான முரண்பாடுகள் எஞ்சியுள்ளன:

பணி கடினத்தன்மைக்கான நிவாரணம்

தொழிற்சங்கங்கள்: பொதுவான முன்கூட்டிய ஓய்வுரிமை வழங்கப்பட வேண்டும்.
முதலாளிகள்: தனிப்பட்ட தீர்வு வழங்கப்பட வேண்டும்.

பின்வரும் புள்ளிகளில் இன்னமும் உடன்பாடு தேவையானது எனப் பிரதமர் தெரிவித்தார்.

மாற்றங்களுக்கான நிதி ஆதாரம்:
பணி தொடர்பான விபத்துகள் மற்றும் தொழிலால் ஏற்படும் நோய்களுக்கு: €500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலை-ஓய்வு சேர்க்கை ஒழுங்குபடுத்தல் வழியாக: மற்றொரு €500 மில்லியன்.
ஆனால் நிதிநிறைவுக்கும் நிதிச்சுமை சமநிலைக்கும் தேவையான €400 மில்லியனுக்கான பூரண நிதி ஒப்பந்தம் இன்னும் எங்களிடம் இல்லை.

'இந்த இரண்டு விஷயங்களும் சுலபமாக தீர்த்துவைக்கக்கூடியவை. சமரசம் அருகிலேயே உள்ளது,' என வலியுறுத்தியார் பிரதமர்.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026