எம்பாப்பே மன அழுத்தத்தால் பாதிப்பு: PSG மீது வழக்கு பதிவு!!
26 ஆனி 2025 வியாழன் 14:47 | பார்வைகள் : 3914
பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியான் எம்பாப்பே, தனது முந்தைய கிளப்பான பரிஸ் சென்ட்-ஜெர்மேன் (PSG) மீது, 2023ல் தனது தனிமைப்படுத்தலையும், கையெழுத்து பெற முயற்சித்ததையும் காரணமாகக் காட்டி, 2024 மே மாதத்தில் மன அழுத்தம் மற்றும் extortion (ஏதாவது ஒன்றை, குறிப்பாக பணத்தை, பலவந்தமாக அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் பெறும் நடைமுறை) முயற்சி குறித்த புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, பரிஸ் நீதித்துறை 2024 ஜூன் 25 அன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. PSG இல் "loft" எனப்படும் நடைமுறை, சில வீரர்களை குழுவிலிருந்து விலக்கி வைக்க பயன்படுத்தப்படுவதாக எம்பாப்பே குற்றம் சாட்டியுள்ளார். இந்த "loft" நடைமுறை குறித்து ஏற்கனவே பல கிளப்புகள் மீது மன அழுத்தம் மற்றும் extortion குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2024 ஜனவரியில், தொழில்முறை வீரர்கள் சங்கமும் இதேபோன்று X எதிராக புகார் கொடுத்துள்ளது. PSG மீதான மற்றொரு புகாராக, கால்பந்து வீராங்கனை கேஹிரா ஹம்ராவியும் (Kheira Hamraoui) மன அழுத்தம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, எம்பாப்பேக்கும் PSG-க்கும் இடையே நிதிச் சிக்கல் நிலவி வருவதும் யாவரும் அறிந்ததே.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan