Paristamil Navigation Paristamil advert login

எம்பாப்பே மன அழுத்தத்தால் பாதிப்பு: PSG மீது வழக்கு பதிவு!!

எம்பாப்பே மன அழுத்தத்தால் பாதிப்பு: PSG மீது வழக்கு பதிவு!!

26 ஆனி 2025 வியாழன் 14:47 | பார்வைகள் : 3541


பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியான் எம்பாப்பே, தனது முந்தைய கிளப்பான பரிஸ் சென்ட்-ஜெர்மேன் (PSG) மீது, 2023ல் தனது தனிமைப்படுத்தலையும், கையெழுத்து பெற முயற்சித்ததையும் காரணமாகக் காட்டி, 2024 மே மாதத்தில் மன அழுத்தம் மற்றும் extortion (ஏதாவது ஒன்றை, குறிப்பாக பணத்தை, பலவந்தமாக அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் பெறும் நடைமுறை) முயற்சி குறித்த புகார் அளித்திருந்தார். 

இதையடுத்து, பரிஸ் நீதித்துறை 2024 ஜூன் 25 அன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. PSG இல் "loft" எனப்படும் நடைமுறை, சில வீரர்களை குழுவிலிருந்து விலக்கி வைக்க பயன்படுத்தப்படுவதாக எம்பாப்பே குற்றம் சாட்டியுள்ளார். இந்த "loft" நடைமுறை குறித்து ஏற்கனவே பல கிளப்புகள் மீது மன அழுத்தம் மற்றும் extortion குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

2024 ஜனவரியில், தொழில்முறை வீரர்கள் சங்கமும் இதேபோன்று X எதிராக புகார் கொடுத்துள்ளது. PSG மீதான மற்றொரு புகாராக, கால்பந்து வீராங்கனை கேஹிரா ஹம்ராவியும் (Kheira Hamraoui) மன அழுத்தம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, எம்பாப்பேக்கும் PSG-க்கும் இடையே நிதிச் சிக்கல் நிலவி வருவதும் யாவரும் அறிந்ததே.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026