Paristamil Navigation Paristamil advert login

இத்தாலி செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் இருவர் கைது

இத்தாலி செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் இருவர் கைது

26 ஆனி 2025 வியாழன் 07:44 | பார்வைகள் : 276


மோசடியாக தயாரிக்கப்பட்ட இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை அன்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு தமிழ் இளைஞர்கள் அவர்கள்.

அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்