12 வயது சிறுவன் பலி! - இரண்டாக உயர்வடைந்த மரணங்கள்!!

26 ஆனி 2025 வியாழன் 06:31 | பார்வைகள் : 1310
நேற்று ஜூன் 25, புதன்கிழமை நாட்டின் பல பகுதிகளை புயல் சூறையாடியிருந்தது. இடி மின்னல் தாக்குதல்களுடன், மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
12 வயது சிறுவன் பலி!
நேற்று மாலை 9 மணி அளவில் தெற்கு பிரான்சின் Tarn-et-Garonne நகரில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் பலியாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
59 வயது நபர் பலி!
பிரான்சின் வடமேற்கு பகுதியான Mayenne மாவட்டத்தின் Saint-Cyr-en-Pail நகரில் 59 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். மரம் ஒன்று முறிந்து விழுந்து, படுகாயமடைந்து பலியாகியுள்ளார். அங்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.