Paristamil Navigation Paristamil advert login

நாய் இறைச்சி விற்க தடை விதித்த பிரபல நாடு

நாய் இறைச்சி விற்க தடை விதித்த பிரபல நாடு

25 ஆனி 2025 புதன் 19:44 | பார்வைகள் : 320


தென் கொரியாவில்  நாய் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாய் இறைச்சியை நுகர்வுக்காக விற்பனை செய்வதை தென் கொரியா தடை செய்துள்ளது. 

இதனுடன் தொடர்புடைய சட்டமூலம் 2024 ஆம் ஆண்டில் வரையப்பட்டு கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. 

நாய் இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த தொழில்துறையிலிருந்து வெளியேற 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த காலப்பகுதி போதாது என கூறியுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்