Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஈரா னுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்

ஈரா னுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்

25 ஆனி 2025 புதன் 18:44 | பார்வைகள் : 2944


ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 12 நாட்களாக நடைபெற்ற போர் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஈரானின் 3 அணு ஆயுத தளங்கள் மீது "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் மூலம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக தகர்ப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பாகவே அங்கிருந்த 400 கிலோ யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாகவும், அணு ஆயுதம் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உளவு அமைப்புகளின் அறிக்கைகளை மறுத்துள்ள டிரம்ப், "ஈரானால் யுரேனியத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களிடம் இருந்த ஒரே வாய்ப்பான யுரேனியத்தை முற்றிலுமாக அழித்து விட்டோம்.

இதனால், ஈரானால் மீண்டும் அணுசக்தி திட்டத்தை தொடங்க முடியாது. அப்படி தொடங்கினால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்