இடி மின்னல் மழை - இல்-து-பிரான்ஸ் உட்பட 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

25 ஆனி 2025 புதன் 08:53 | பார்வைகள் : 771
இன்று ஜூன் 25, புதன்கிழமை நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் எனவும், இன்று இவ்வருடத்தின் அதிகூடிய வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40°C இற்கும் மேல் வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாலை 4 மணியின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள், ஆலங்கட்டி மமை போன்ற அனர்த்தங்கள் ஏற்படும்.
இடி மின்னல் காரணமாக 47 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளன.
மாலை 4 மணி முதல் , Tarn-et-Garonne, Haute-Garonne, Gers, Lot-et-Garonne, Dordogne, Charente, Vienne, Haute-Vienne, Saône-et-Loire, Côte-d'Or, Nièvre, Yonne, Creuse, Corrèze, Cantal, Puy-de-Dôme, Allier, Loire, Cher, Loiret ஆகிய மாவட்டங்களுக்கும்,
மாலை 6 மணியில் இருந்து Orne, Calvados, Eure, Eure-et-Loir, Mayenne, Sarthe, Indre-et-Loire, Loir-et-Cher, Indre ஆகிய மாவட்டங்களுக்கும்,
மாலை 8 மணியில் இருந்து Somme, Seine-Maritime, Oise, Aisne, Val-d'Oise, Seine-et-Marne, Val-de-Marne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Paris, Essonne, Yvelines, Aube, Marne, Haute-Marne மாவட்டங்களுக்கும்
செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.