Paristamil Navigation Paristamil advert login

பழுதடைந்த ஏர்பேக்குகள் உள்ள 17 இலட்சம் டகாட்டா கார்களை திரும்பப் பெற அரசாங்கம் உத்தரவு!!

பழுதடைந்த ஏர்பேக்குகள் உள்ள 17 இலட்சம் டகாட்டா கார்களை திரும்பப் பெற அரசாங்கம் உத்தரவு!!

24 ஆனி 2025 செவ்வாய் 21:15 | பார்வைகள் : 773


பிரான்சில் டகாட்டா (Takata) நிறுவனத்தின் ஏர்பேக்குகள் விபத்துகளுக்கு காரணமாக இருப்பதால், அரசாங்கம் 17 இலட்சம் வாகனங்களை சாலையில் இயக்க முடியாதவையாக அறிவித்துள்ளது. 

குறிப்பாக 2011க்குமுன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், Corse மற்றும் வெளிநாட்டு பிரதேசங்களில் உள்ள வாகனங்களும் இதில் உள்ளடகங்கும். அமோனியம் நைட்ரேட் மற்றும் ஈரத்தன்மை கட்டுப்பாட்டில்லாத தொழில்நுட்பம் கொண்ட ஏர்பேக்குகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அனைத்து கார் நிறுவனங்களும் அவசரமாக வாகனங்களை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ஏர்பேக்குகள் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில் Reims ஒரு பெண் ஏர்பேக் வெடித்ததால் உயிரிழந்தார். 

2014 முதல் இந்த தொழில்துறை பிரச்சனை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்புக்காக உள்ள ஏர்பேக்குகள் வெப்பமும் ஈரத்தன்மையும் அதிகமான காலநிலைகளில் பயங்கரமாக செயல்படுகின்றன. அரசாங்கம், மக்கள் வாகனங்களை உடனடியாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்